சுமை

"நீ அழைத்தது ஒலிக்கவே இல்லை",

"நீ அனுப்பிய செய்தி இப்போது தான் வந்தது",

"ஏனோ நான் அனுப்பினால் போவதே இல்லை" - 

"அம்மா கிட்டசொல்லி விட்டுத் தான் போனேன்"

பலரது பொய் சுமைகளை அமைதியாக சுமந்தாலும்,

தனக்காக என்றும் பொய் சொன்னதில்லை - 

அம்மாவும், செல்பேசியும் !!


Comments